பெண்ணியப் பேச்சில் மண்ணில் வீழாதிருத்தல்
மகளிர்க்குக் கடனே
அன்னைத் திருநாட்டில் அந்நியனாய் வாழாதிருத்தல்
ஆடவர்க்குக் கடனே
கறை படியாத கல்வியைக் காலத்தே வழங்குதல்
கற்பிப்போன் கடனே
நன்னடை நடந்து நாட்டையும் நடக்கச் செய்தல்
நாடாள்வான் கடனே
காலக் கனவை விட்டு கடமை நினைவை செயலாற்றுதல்
காளையர் கடனே