தொலைந்து விட்ட உறவுகள்
தொலையாத நினைவுகள்
தூரங்கள் மறைந்தாலும்
மனதின் துயரங்களோ
இன்னும் ஈரமாக
காயம் பட்ட இதயம்
கனமாய் வலிக்கிறது
வழிந்தோடும் கண்ணீரே
இதயத்தின் கனத்தை
இனியாவது கரைக்ககூடாதா
உள்ளத்தின் உளறல்கள்
ஊமை ஆயின
ஊருக்கு ஏற்றவாறு
ஒன்றிரண்டு சொற்களில்
ஓய்ந்து தொலைந்தன
வாக்கியங்கள்
பிணங்களை
நடமாடச் செய்யும்
நளினம் தெரியாத
இவ்வுலகிற்கு
எங்களது வாழ்கை
ரகசியத்தைப்
படித்துக் காட்டுங்கள்
நடந்து திரிந்தாலும்
நான் ஊனப்பட்டவன்
என்பதை
நான் அறிவேன்
அடியே
கல்மனதுக்காரி
காரியத்தில் கெட்டிக்காரி
கொட்டி விட்டதடி
எனது கோவில்
எங்களுக்குத் தோண்டப்பட்ட
குழியின் மண்
உங்கள் வாழ்கையில்
வந்து விழுந்துவிடலாம்
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தங்கள் செய்பவளே
வளரும் எங்களது நாட்டிற்கு
வாலிபமே முதுகெலும்பு
உனது
பொய்யான வார்த்தைகளிலும்
மெய்யால் உருவான வளைவுகளிலும்
ஒடிந்து விழுவது
வாலிபம் மட்டும்மல்ல
எங்கள் நாட்டின்
வாழ்க்கை வளங்களும் தான்
கரைந்து ஓடுவது
கண்ணீர் மட்டும்மல்
எங்கள் இமயத்தின்
சிகரமும் தான்
கால தேவனின் மாற்றத்தால்
அந்நிய நாட்டின் மோகத்தால்
குறைந்து விட்டது
உங்களின் ஆடை மட்டும்மல்ல
இளைய இதயங்களின்
ஆயுளும் தான்
நாங்கள்
ஆயுதம் ஏந்தி வந்தவர்களை
காகிதத்தால் கட்டுப்படுத்தியவர்கள்
அடிகளையும் உதைகளையும்
அகிம்சையால் தாங்கியவர்கள்
நாட்டை நாசமாக்கும்
உனது
நயவஞ்சக நாடகத்தை
நிறுத்திவிடு
இல்லையேல்
எங்கள் நாட்டை விட்டு ஓடிவிடு
விழுந்தாலும் விதைக்கப்படுவோம்
மடிந்தாலும் மறுபடியும் பிறப்போம்
எங்களை காயப்படுத்தவே
உன்னால் முடிவும்
கலங்கப் படுத்தமுடியும்மா ?