என் மனைவியைப் பிடிததுள்ளது
அவள் காயவைத்த துணியை நனைப்தும்
ஈரமான அவள் மனதைக் காயவைப்பதும்...
மழைக்கும்
என் மனைவியைப் பிடித்துள்ளது.
பெண்ணியப் பேச்சில் மண்ணில் வீழாதிருத்தல்
மகளிர்க்குக் கடனே
அன்னைத் திருநாட்டில் அந்நியனாய் வாழாதிருத்தல்
ஆடவர்க்குக் கடனே
கறை படியாத கல்வியைக் காலத்தே வழங்குதல்
கற்பிப்போன் கடனே
நன்னடை நடந்து நாட்டையும் நடக்கச் செய்தல்
நாடாள்வான் கடனே
காலக் கனவை விட்டு கடமை நினைவை செயலாற்றுதல்
காளையர் கடனே
பரந்து விரிந்த
பால் அண்டங்களும்
அகண்டோடிய ஆகாய வழிகளும்
மனிதனின் இதயமாக
இருண்டு இருப்பதுதான்
இயல்பா ? இல்லை .
இங்கே இரவென்றால்
இன்னொரு பகுதியில்
பகல் என்பதைப்
பார்த்ததுண்டா ?
அம்மாவாசை உனக்கென்றால்
அண்டத்தின் வேறெங்கோ
முழு நிலவு
பகல் போல் ஒளிர்வதை
உணர்ந்ததுண்டா ?
சுழன்று உருளும்
உனது உலகை
உருட்டிப் பார்
இரவில் பகலையும்
பகலில் இரவையும்
பார்த்து ரசிப்பாய்
இரவை துயரத்துடனும்
பகலைப் பரவசத்துடனும்
பாடும் புலவனுக்கு
தடை விதிப்போம்
இரவையும் பகலையும்
பட்டியலிடும்
ஏடுகளை திருத்தியமைபோம்
மறைக்கப் பட்ட
பகல்தான் இரவு
இருட்டடிப்புச் செய்யப்பட்ட
இரவுதான் பகல் என்பதை
பாருக்கு உணர்த்துவோம் .